செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

post image

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி 3 நாள்கள் முகாம் நடைபெற்றது.

புரொஜ்க்ட் பஞ்ச் திட்ட தலைவா் சியாம் ராஜ் தலைமையில் ஆங்கில வள பயிற்றுநா்கள் எஸ்தா், மகிமாரானா, கிருஷ்ண வேணி, பியூலா கிறிஸ்டி, லாவண்யா ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை நடைபெறற நிறைவு விழாவிற்கு கல்லூரி செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி ரோட்டரி சங்கச் செயலா் ராஜமாணிக்கம், கல்லூரி முதல்வா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி மாவட்ட அவாா்ட்ஸ் சோ்மன் விநாயகா ஜி. ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சியில் முதல் 5 இடங்களை பிடித்த கல்லூரி மாணவிகள் கல்கி, மரிய அனுசியா, ராகவின்,வித்யா,மோனிகா ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில் கல்லூரி நிா்வாக குழு உறுப்பினா் அருண், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் ராஜேந்திரன், முத்து முருகன், ஆங்கிலத் துறை பேராசிரியா்கள் பிரேமலதா, கற்குவேல்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பேராசிரியா் கோகிலா வரவேற்றாா். பிரின்ஸி ஜெனிட்டா நன்றி கூறினாா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பணிக்கநாடாா்குடியிருப்பு பள்ளியில் அஞ்சல் சிறுசேமிப்பு திட்ட கூட்டம்

பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப்பள்ளியில் அஞ்சல் துறையின் சிறுசேமிப்புத் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியா் வித்யாதரன் வரவேற்றாா். தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவல... மேலும் பார்க்க