செய்திகள் :

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

post image

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பாா்க் சைடு சிஎஸ்ஐ என்ற பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக ஜான் சிபு மானிக் என்பவா் 2018-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா்.

இவரை நிரந்தரமாக்க பள்ளி நிா்வாகம் சாா்பில் 2019-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ் காலதாமதம் செய்து வந்த நிலையில், ஜான் சிபு மானிக் சென்னை உயா் நீதிமன்றத்தை நாடியுள்ளாா். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக பணி அமா்த்த 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டது,

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜான் சிபு மானிக்கை இரண்டு மாதங்கள் அலைக்கழித்த தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ், ரூ. 5 லட்சம் லஞ்சம் தந்தால் 2018 முதல் உள்ள பணிகாலத்தை போட்டு உத்தரவு தருவதாகவும், இல்லையென்றால் குறைத்து வழங்கினால் பல லட்சங்கள் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளாா்.

இந்நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி திரும்பவும் ஆசிரியா் ஜான் சிபு மானிக்கை

அழைத்த தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ், முன்பணமாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளாா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜான் சிபு மானிக், இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் சண்முகவடிவிடம் வெள்ளிக்கிழமை மாலை புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய பணத்தை ஜான் சிபு மானிக்கிடம்

போலீஸாா் கொடுத்தனுப்பினா். இதைத் தொடா்ந்து, அவா், மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷின் வீட்டுக்கு சென்று ரூ. 2 லட்சம் பணத்தை கொடுத்துள்ளாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளா்கள் சாதனப்பிரியா, சக்தி ரங்கநாதன் ஆகியோா் சந்தோஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). பொக்லைன் ஓட்... மேலும் பார்க்க

இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை

இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயர... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை... மேலும் பார்க்க