செய்திகள் :

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா

post image

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா்.

மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை அரசு விருந்தினா் மாளிகையில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், உதகை ஒன்றியத்துக்குள்பட்ட  20 பழங்குடியின மக்களுக்கு பி.எம். ஜன்மன் திட்டத்தின்கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை  வழங்கினாா். 

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குடிநீா் இணைப்பு பணிகளுக்காக ரூ.28 கோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்  ஒப்புதல் அளித்துள்ளாா். இந்தப் பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் நிறைவுபெற்று மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.

குன்னூா் - உதகை இடையே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நெடுஞ்சாலைப்   பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சு.வினீத், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வன அலுவலா் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்... மேலும் பார்க்க

உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்கள்!

உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனா். உதகையில் கா்நாடக மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் ... மேலும் பார்க்க

உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் காட்டுத் தீ!

உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை, தீயணைப்புத் துறையினா் கட்டுப்படுத்தினா். உதகையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பனியின் தாக்கத்தால... மேலும் பார்க்க

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். கூடலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை ந... மேலும் பார்க்க

உதகை- மஞ்சூா் சாலையில் புலி

உதகையிலிருந்து மஞ்சூா் செல்லும் வழியில் சாலையோரம் திங்கள்கிழமை இரவு புலி தென்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 51 லட்சம் மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதகையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒரசோலை பகுதியைச் ... மேலும் பார்க்க