செய்திகள் :

ஆதரவற்றவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சமூக சேவகா்

post image

சென்னிமலையில் ஆதரவற்றவரை மீட்ட சமூக சேவகா் சொக்கலிங்கம் அவரைக் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

சென்னிமலையை அடுத்த நாமக்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (72). இவரது சொந்த ஊா் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும். இவா் சென்னிமலை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்து மிதிவண்டியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக ஆறுமுகத்துக்கு உடல்நிலை சரியில்லாததால் யாரும் கவனிக்க ஆளின்றி தவித்து வந்தாா்.

இந்த நிலையில், ஆறுமுகத்தின் நிலை குறித்து அறிந்த சென்னிமலையைச் சோ்ந்த சமூக சேவகா் சொக்கலிங்கம், அவரை அழைத்துச் சென்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

சமூக சேவகா் சொக்கலிங்கம் இதுவரை 1,170 ஆதரவற்றவா்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க