செய்திகள் :

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பின் தலைவா் கண.குறிஞ்சி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழா் பேரவையின் நிறுவன தலைவா் அதியமான், திராவிடா் கழக துணைப் பொதுச்செயலாளா் மதிவதனி ஆகியோா் பேசினா்.

இதில், புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கான கல்வித் தொகையை வழங்க மறுப்பதை கண்டித்தும், யுஜிசி விதிகளை திருத்தி ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திராவிடா் கழக மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், திராவிடா் விடுதலை கழக மாநில அமைப்பு செயலாளா் ரத்தினசாமி, நீரோடை அமைப்பு தலைவா் நிலவன், தமிழ்புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளா் சிந்தனை செல்வன், தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல்

சென்னிமலை வாரச் சந்தையில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்ட நுகா்வோா் அமைப்புகள் அளித்த புகாரின்பேரில் ஈர... மேலும் பார்க்க