செய்திகள் :

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

post image

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.

அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். பல்வேறு நபர்களும், தங்களது ஜிமெயில் கணக்குகளை செல்போனில்தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர், போன் வாங்கியதுமே, அதனை ஆன் செய்யும்போது கேட்கும் மெயிலில் இந்த ஜிமெயில் கணக்கைப் பதிவுசெய்துதான் திறந்திருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல், மெயில் ஐடி என்று யார், எங்கு கேட்டாலும் அதனை கொடுத்துவிடுவோம். ஆனால், அவ்வப்போது அதனை சோதித்து தேவையில்லாததை டெலிட் செய்வது போன்றவற்றை செய்திருக்க மாட்டோம். ஆனால், அதெல்லாம் இப்போது சிக்கலில்லை.

வேறென்ன சிக்கல் என்றால், நாம் செல்போனில் பயன்படுத்திய செயலிகள், ஜிமெயில் கணக்கு மூலம் உள் நுழைந்த இணையதளங்கள் என பலவற்றை நாம் மறந்தே போயிருப்போம். சில செயலிகளை தேவையில்லை என டெலீட் கூட செய்திருப்போம்.

ஆனால், அந்த செயலிகளும் இணையதளங்களும் நமது ஜிமெயிலுடன் தொடர்பில்தான் இருக்கும். அவர்களது தொடர்பை நாம் முற்றிலும் துண்டிக்க வேண்டும்.

அதற்கு..

ஜிமெயில் கணக்குக்குச் சென்று, ப்ரொஃபைல் என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் என்பதை கிளிச் செய்ய வேண்டும்.

அதில் செக்யூரிட்டி என்று இருக்கும். அதைக் கிளிக் செய்யவும்.

அதில் யுவர் கனெக்ஷன் டு தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் என்பதை த் தேர்வு செய்ய வேண்டும்.

அதில், மொத்த ஹிஸ்ரியும் பட்டியலிடப்படும்.

அதில் உங்களுக்குத் தேவையில்லாதவற்றை டெலிட் செய்து விடுங்கள்.

இதனால் என்ன ஆகும்? எதுவும் ஆகாது. உங்களது ஜிமெயில் ஐடி பாதுகாப்பாக இருக்கும். தேவையற்றவர்கள் கையில் ஜிமெயில் சிக்காது. தேவையற்ற குப்பைகள் சேராது. சைபர் குற்றவாளிகளிடமிருந்தும் பாதுகாக்கப்படலாம்.

எனவே, ஜிமெயில் வைத்திருப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை இதனை செய்துவிடுவது சாலச் சிறந்தது.

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க