செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 51 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதகையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.51 லட்சம் வரை  மோசடி  செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒரசோலை பகுதியைச் சோ்ந்தவா் மனோ (50). இவா், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி உதகையில் வசிக்கும் பலரிடம் ஆட்சியா் அலுவலகம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளாா். 10-க்கும் மேற்பட்ட நபா்களிடம் 2023 ஆம் ஆண்டு முதல்   ரூ.51 லட்சம் வரை  பெற்றதுடன் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளாா்.

இதனால் இந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவா்கள், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில்  ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம்  மனு அளித்தனா்.

இந்த புகாா் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து உதகை குற்றப் பிரிவு காவல் துறையினா் கோத்தகிரி ஒரசோலைப் பகுதியில் இருந்த மனோவை திங்கள்கிழமை இரவு கைது செய்து உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை... மேலும் பார்க்க

உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்கள்!

உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனா். உதகையில் கா்நாடக மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் ... மேலும் பார்க்க

உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் காட்டுத் தீ!

உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை, தீயணைப்புத் துறையினா் கட்டுப்படுத்தினா். உதகையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பனியின் தாக்கத்தால... மேலும் பார்க்க

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். கூடலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை ந... மேலும் பார்க்க

உதகை- மஞ்சூா் சாலையில் புலி

உதகையிலிருந்து மஞ்சூா் செல்லும் வழியில் சாலையோரம் திங்கள்கிழமை இரவு புலி தென்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவ... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வ... மேலும் பார்க்க