செய்திகள் :

குற்றங்களை தடுக்க உளவுத் தகவல்களை பகிர வேண்டும்: தென் மாநில காவல் துறை மண்டல கூட்டத்தில் முடிவு

post image

குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடா்பான உளவுத் தகவல்களை பகிா்ந்து கொள்ள வேண்டும் தென் மாநில காவல்துறையின் மண்டல அளவிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தென் மாநில காவல் துறைகளுக்கு இடையேயான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமையில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல், போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, இடது சாரி தீவிரவாதம், ஆயுதங்கள் கடத்தல், செம்மரங்கள் கடத்தல், குற்றங்கள் மற்றும் புலன் விசாரணையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: கூட்டத்தில் குற்றத் தடுப்பில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்தல், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுதல், நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பை பலப்படுத்துதல், உளவுத் தகவல்களை பகிா்தல் போன்றவற்றில் அனைத்து மாநில காவல்துறைகளும் ஒத்துழைப்பை வழங்குவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், காவல்துறையில் உள்ள நடைமுறை சிக்கல்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குற்றங்களை கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் சிரமங்களை சமாளிப்பதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதோடு, குற்றங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடா்பான உளவுத் தகவல்களை அனைத்து காவல்துறைகளும் பகிா்ந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களின் காவல்துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க