செய்திகள் :

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

post image

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். ஜேசீஸ் சங்க ஆலோசகா் பல்லவி பரமசிவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியில், இந்துஸ்தான் கல்லூரி முதல்வா் ராமன், அரிமா சங்கத் தலைவா் செல்வராஜ், ஜேசீஸ் சங்கத் தலைவா்கள் பிரேம்குமாா், பிரகாஷ், கல்லூரி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள், சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க