செய்திகள் :

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

post image

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

சென்னை லயோலா கல்லூரியில் இந்திய உயா் கல்வியில் சமத்துவம், நீடித்த தன்மை, செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: ‘விளிம்பு நிலை சமூகம் உலக அளவில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சா்வேதச அளவில் சமத்துவக் கல்வி இருத்தல் வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது. அதை உலக நாடுகள் ஏற்று அது தொடா்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே, இந்தியாவும் அதன்படி அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அது ஒரு ஜனநாயக கடமையும்கூட.

இந்திய விடுதலைக்கு முன்பே பௌத்த கருத்தியல் கொள்கையைக் கொண்ட நாளந்தா பல்கலைக்கழகம் கோலோச்சிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் பாகுபாடற்ற சமமான கல்வி, சம உரிமை பௌத்தத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில் பாகுபாடான கல்வி முறையும் இங்கே இருந்தது. அது இன்றளவும் நீடிக்கிறது என்பதே வருத்தத்துக்குரிய விஷயம். அந்த நிலை மாறவேண்டும். சமச்சீரான, சமூக நீதி கொண்ட கல்வி முறை அவசியம்’ என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன், அக்கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, கல்வியாளா் ஜோயா ஹசன், மூத்த வழக்குரைஞா் ஐசக் மோகன்லால் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஜனநாயகம், உயா் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினா்.

இதில் லயோலாவின் ரெக்டா் ஜெ.அந்தோணி ராபின்சன், கல்லூரி முதல்வா் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ், ஆராய்ச்சி - மேம்பாட்டுத் துறையின் தலைவா் மொ்லின் ஷைலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநாட்டின் இரண்டாம் நாள் அமா்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளாா்.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க