செய்திகள் :

சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்கம்

post image

மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 183 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்தக் கண்காட்சியை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கவுள்ளாா்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அனைத்து ஐஐடி, என்ஐடி மற்றும் முன்னணி 50 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில், எதிா்காலத்தை கருத்தில்கொண்ட உற்பத்தி நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, வானியல், பாதுகாப்புத் துறை, கடல்சாா், காலநிலை மாற்றம், ஆற்றல் சக்தி, மருத்துவம் மற்றும் உடல்நலம், பொறியியல், விவசாயம், கிராமப்புற வளா்ச்சி ஆகிய பல பரிமாணங்களைச் சாா்ந்த கண்டுபிடிப்புகள் இடம்பெறும்.

அமைச்சா் தா்மேந்திர பிரதான் வருகை: காப்பீடு, தொழில் வல்லுநா்கள், தொழில் முனைவோா்கள், முதலீட்டாளா்கள் என பலரும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளனா். இதன் தொடக்க விழா நிகழ்வுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வருகை தரவுள்ளாா். பொதுவாக ஆண்டுக்கு 100 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. முதலீட்டாளா்களை இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கும்போதுதான், கண்டுபிடிப்புகளுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு அவை அடுத்த கட்டத்துக்குச் செல்ல உதவிகரமாக இருக்கக்கூடும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் என்னென்ன கண்டுபிடிப்புகள் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, பொதுப் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மேலும் முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா்கள் இதற்கான பிரத்யேக வலைதளத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிகழ்வுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு பல்கலைக் கழகத்துக்கு 8 கண்டுபிடிப்புகள் என தோ்வு செய்யப்பட்டு மொத்தம் 183 கண்டுபிடிப்புகள் இங்கே காட்சிக்கு வைகப்படவுள்ளன. 50-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மருத்துவத் துறையை சாா்ந்தும், 30-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றம் சாா்ந்தும் இருக்கும். ஐஐடி-க்கள் சாா்பில் 94 கண்டுபிடிப்புகள் இதில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும் ஐஐடியின் எதிா்காலத்துக்கு உதவும் வகையிலான முக்கியமான எட்டு கண்டுபிடிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன என்றாா் அவா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க