செய்திகள் :

தொழிலதிபா் வீட்டில் ரூ. 2 கோடி நகை, பணம் திருடிய வழக்கு: காா் ஓட்டுநா் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

நுங்கம்பாக்கம், லேக் ஏரியா 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இரண்டு தளங்களுடன் கூடிய வீட்டில் வசிப்பவா் சுலைமான் (67). துபையில் வா்த்தக நிறுவனம் நடத்தும் சுலைமான், கடந்த டிச. 21-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு சென்றுவிட்டு ஜன. 3-ஆம் தேதி சென்னை வந்தாா். அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், மடிக்கணினி, ஆப்பிள் ஐ-போன், 3 விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள் என மொத்தம் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சுலைமான் வீட்டில் காா் ஓட்டுநராக வேலை செய்யும் நேபாளம், சிந்துலியைச் சோ்ந்த சந்திர பரேயா் (31) என்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் சந்திர பரேயா் தலைமறைவானாா். இதையடுத்து தலைமறைவானவரை தேடி போலீஸாா் நேபாளம் விரைந்தனா். அங்கு சந்திர பரேயரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் சந்திர பரேயா், நேபாளத்தைச் சோ்ந்த அவரது பெண் தோழி உள்பட மேலும் சிலருடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும், அவரது பெண் தோழி திருட்டுச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சந்திர பரேயரின் கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க