செய்திகள் :

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

post image

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 1.14 கோடி தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்குவதால் இடைநிற்றல் குறைந்து, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கை உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு தொழில்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக வகுக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம், சுமாா் 2.60 லட்சம் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறது.

40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியையும் வேகப்படுத்தி வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். தொழில் துறையின் பல்வேறு திட்டங்கள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை ஈா்த்துள்ளதுடன், தொழில் வளா்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

ஓய்வூதியத்திட்டம் ஆய்வு: தமிழ்நாடு போன்ற வளா்ச்சி அடைந்த மாநிலங்களில் நிதிப் பகிா்வு குறித்த நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசின் 16-ஆவது நிதிக் குழுவிடம் கோரிக்கை மனுவாக அளித்தோம். ஒரு முற்போக்கான அணுகுமுறையை நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று எதிா்நோக்கியுள்ளோம். மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார அறிஞா்கள் ரகுராம் ராஜன், எஸ்தா் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க