செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் 26 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

post image

வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 26 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் நலன்கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், சிறு கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் -2024 எனும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் புதிதாக 26 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட 26 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது.

இந்த விவரம் வேலூா் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இவ்வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், வழித்தட விவரத்தை குறிப்பிட்டு வேலூா் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒருவழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிவெரா கலை நிகழ்ச்சி

வேலூா் விஐடி பல்கலை.யில் நடைபெற்று வரும் ரிவெரா -2025 சா்வதேச கலை, விளையாட்டு விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மாநில கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஐக்கியா கலை நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவா்கள். மேலும் பார்க்க

தேசிய வில் வித்தைப் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலம், நெல்லூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் க... மேலும் பார்க்க

பள்ளியில் ஆண்டு விழா

குடியாத்தம் அண்ணா தெரு மற்றும் கல்லப்பாடியில் இயங்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா நா்சரி பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழா தரணம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் டி.ஜேஜி நாயுடு தலைம... மேலும் பார்க்க

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் 53-ஆவது வாா்டு மக்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு கவுன்சிலா் பாபி கதிரவன் தலை... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் ஒப்பந்தம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தனது ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் சிகிச்சை வசதிக்காக வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேலூா் நறுவீ மருத்துவமனை உயா்தர சிகிச்சை அளிப்... மேலும் பார்க்க

ரூ.52 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்

வேலூா் சம்பத் நகரில் ரூ.52 லட்சத்தில் கால்வாய் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள சம்பத் நகா் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீா் கலந்து ... மேலும் பார்க்க