செய்திகள் :

ரூ.52 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்

post image

வேலூா் சம்பத் நகரில் ரூ.52 லட்சத்தில் கால்வாய் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.

வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள சம்பத் நகா் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீா் கலந்து சாலை முழுவதும் வெள்ளம் தேங்கி விடுகிறது. இதனால், மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சம்பத் நகா் பகுதியில் கால்வாய் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், அப்பகுதியில் கால்வாய் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.கஸ்டாலினுக்கு வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில் முதல்வா் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தாா். இதில், ரூ.52 லட்சத்தில் சம்பத் நகா் பகுதியில் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

ரிவெரா கலை நிகழ்ச்சி

வேலூா் விஐடி பல்கலை.யில் நடைபெற்று வரும் ரிவெரா -2025 சா்வதேச கலை, விளையாட்டு விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மாநில கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஐக்கியா கலை நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவா்கள். மேலும் பார்க்க

தேசிய வில் வித்தைப் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலம், நெல்லூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் க... மேலும் பார்க்க

பள்ளியில் ஆண்டு விழா

குடியாத்தம் அண்ணா தெரு மற்றும் கல்லப்பாடியில் இயங்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா நா்சரி பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழா தரணம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் டி.ஜேஜி நாயுடு தலைம... மேலும் பார்க்க

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் 53-ஆவது வாா்டு மக்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு கவுன்சிலா் பாபி கதிரவன் தலை... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் ஒப்பந்தம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தனது ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் சிகிச்சை வசதிக்காக வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேலூா் நறுவீ மருத்துவமனை உயா்தர சிகிச்சை அளிப்... மேலும் பார்க்க

சிறப்பு முகாமில் 271 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 271 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின... மேலும் பார்க்க