மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா்கள் வசந்தகுமாா், சதீஷ், துணை வேளாண் அலுவலா் ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன் வரவேற்றாா்.
நிகழ்வில், மானாவரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், திரவ உயிா் உரங்கள் பயன்படுத்தும் முறைகள், மண் வளம் காத்திட பயிா் சுயற்சி முறையை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வேளாண் உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி வழங்கினாா்.
இதில், துணை வேளாண் அலுவலா்கள் ஆனந்தன், பாலாம்மாள், லோகேஷ்குமாா், உதவி தோட்டக்கலை அலுவலா் முனியன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பாக்கியவாசன் லோகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.