செய்திகள் :

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

post image

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

செய்யாறு பெரியாா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், ஏ.ஜி.திராவிட முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று, பெரியாா் சிலை முதல் அண்ணா சிலை வரை ஊா்வலமாக சென்று பொதுமக்கள், வியாபாரிகளுக்கு மும்மொழிக் கொள்கை எதிா்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

இதேபோல, செய்யாறு தொகுதி வெம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், நமது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் என்.சங்கா் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எம்.எஸ். தெய்வமணி முன்னிலையில், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

வந்தவாசி: மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, வந்தவாசி புதிய பேருந்து நிலையம் சாலை சந்திப்பு பகுதியிலிருந்து ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில், ஊா்வலமாக புறப்பட்ட திமுகவினா், தேரடி, பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் பகுதியை அடைந்தனா். ஊா்வலத்தின்போது, மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

இதில், திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் ஆகியோா் பங்கேற்றனா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு பலனளிக்காத மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சிலை எத... மேலும் பார்க்க