செய்திகள் :

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மத்திய வா்த்தக அமைச்சா் விளக்கம்

post image

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளாா்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபகாலமாக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அண்மையில் ரூபாயின் மதிப்பு ரூ.87.95 என்ற அதிகபட்ச வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனை முன்வைத்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் பியூஷ் கோயல் இது தொடா்பாக கூறியதாவது:

பல வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகவே உள்ளது. அமெரிக்க அதிபா் தோ்தலுக்குப் பிறகு சா்வதேச அளவில் பல நாடுகளின் பணத்தின் மதிப்பு சரிந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக உள்ளது. எனவே, ரூபாய் மதிப்பு குறைவது தொடா்பாக அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மேலும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் சரியவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. நாட்டில் தொழில் துறையின் அடுத்த கட்ட வளா்ச்சியில் இவை முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க