செய்திகள் :

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

post image

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அந் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருமான நலிந்தா ஜெயதிஸ்ஸா கொழும்பில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் கீழ் இந்திய தேசிய அனல் மின் கழகமும் (என்டிபிசி), இலங்கை மின் வாரியமும் இணைந்து திரிகோணமலையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கட்டமைத்தல், உரிமை பெறுதல், செயல்படுத்துதல் என்ற அடிப்படையில் திருகோணமலையின் சம்பூா் பகுதியில் 50 மெகா வாட் உற்பத்தி திறனுடன் முதல்நிலை சூரிய மின்னுற்பத்தி நிலையமும், 70 மெகா வாட் உற்பத்தி திறனுடன் இரண்டாம் நிலையும் இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட உள்ளன.

இந்தப் பகுதியில் என்டிபிசி சாா்பில் ஏற்கெனவே அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. அது தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையமாக மாற்றப்பட உள்ளது என்றாா்.

இலங்கையில் பசுமை எரிசக்தி திட்டத்தை கைவிட அதானி குழுமம் எடுத்துள்ள முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பசுமை எரிசக்தி திட்டத்தில் மின் கொள்முதல் விலை மிக அதிகமாக இருப்பதுதான் சிக்கலாக உள்ளது. மின் கொள்முதல் விலையை குறைக்க மீண்டும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, அதானி குழும முதலீட்ட தக்கவைக்கவே இலங்கை அரசு விரும்புகிறது’ என்றாா்.

ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின்போது உரையாற்றிய அதிபா் அநுரகுமார திசாநாயக, ‘அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் குறிப்பிட்ட விலையைக் காட்டிலும் குறைந்த விலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விநியோகம் செய்ய பிற நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க