செய்திகள் :

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

post image

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செனட் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து, எஃப்பிஐ-யின் இயக்குநராக காஷ் படேலின் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டது குறித்து காஷ் வெளியிட்ட பதிவில், “என்மீது நம்பிக்கை வைத்த டிரம்புக்கு நன்றி. எஃப்பிஐ மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டெழுப்புவேன். அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன். அமெரிக்காவுக்கு எதிராக இந்த கிரகத்தின் ஒவ்வொரு மூளையில் இருப்பவர்களையும் வேட்டையாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், அமெரிக்காவின் முதன்மை சட்டம்- ஒழுங்கு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்தியா வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமித்தார்.

கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா அதிபா் தோ்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினாா். இவா், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளா் ஆவாா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்க... மேலும் பார்க்க

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க