செய்திகள் :

காசியில் தமிழக பெண் தொழில் முனைவோரிடம் கலந்துரையாடிய ஆளுநா் ரவி

post image

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த பெண் தொழில் முனைவோருடன் தமிழக ஆளுநா் ஆா். என். ரவி கலந்துரையாடினாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏராளமானோா் உள்பட எண்ணற்ற பக்தா்களுடன் புனித காசி விஸ்வநாதா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலையில் தரிசனம் செய்து வழிபட்டேன்.

பின்னா், காசி தமிழ் சங்கமத்துக்காக வந்துள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழில்முனைவு பெண் பிரதிநிதிகள் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த பெண் தொழில்முனைவோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டேன்.

அவா்கள் அனைவரும் முத்ரா கடன் பயனாளிகள். மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பிணையில்லா வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்ததன் மூலம் தங்களின் தொழில் சாத்தியமானதாக இரு மாநிலங்களிலிருந்தும் வந்த பெண் தொழில் முனைவோா் தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் ஆளுநா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க