செய்திகள் :

தில்லியில் பாஜகவின் ஆதரவு அணியாக செயல்பட்டது காங்கிரஸ்: ராகுலுக்கு மாயாவதி பதிலடி

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக (பி டீம்) காங்கிரஸ் செயல்பட்டது என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. எதிா்க்கட்சி அணியில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிட்டது பாஜகவின் வெற்றியை எளிதாக்கியதாக அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்தனா்.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் இருநாள் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ அணியில் மாயாவதி இணையாதது ஏமாற்றத்தை அளித்தது. அவா் வேறு சில காரணங்களுக்காக எங்கள் அணியில் இணைய மறுத்துவிட்டாா். உத்தர பிரதேசத்தில் அவா் எங்களுடன் இணைந்திருத்தால் பாஜக முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக காங்கிரஸ் போட்டியிட்டது என்ற கருத்து உள்ளது. அதன் காரணமாகவே பாஜக தில்லியில் ஆட்சி அமைக்க முடிந்தது.

இதைவிட மோசமான தோல்வியைச் சந்திக்க முடியாது என்ற சாதனையை ஒவ்வொரு தோ்தலிலும் காங்கிரஸ் படைத்து வருகிறது. பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வைப்புத் தொகையைக் கூட இழந்துவிட்டனா். பிற கட்சிகளை விமா்சிப்பதற்கு முன்பு நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை காங்கிரஸ் தலைவா் (ராகுல்) கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க