செய்திகள் :

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

post image

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.

மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட 300 நாள்கள் வரை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள தக்லிமகன் பாலைவனத்தின் மையப் பகுதியில் பூமியின் பரிமாணம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கு ’ஷெண்டிடேக் 1’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக மிக அழமான கிணற்றை தோண்டும் பணியை சீன தேசிய பெட்ரோலியக் கழகம் கடந்த 2023 மே 30-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், 580 நாள்கள் நீடித்த கிணறு தோண்டும் பணியானது நிறைவுற்றதாக சீன அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை தோண்டுவதற்கு 580 நாள்கள் எடுத்துக் கொண்டதாகவும், இதன் ஆழம் 10,910 மீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12,000 அடி வரை துளையிடும் கருவி பயன்படுத்தப்பட்டதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது ஆழமான கிணறாகும்.

ரஷ்யாவின் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் எஸ்ஜி-3 என்ற கிணறு, கடந்த 1989ஆம் ஆண்டு தோண்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 12,262 மீட்டர் ஆழமுடைய இந்த கிணறு, உலகில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான கிணறாக இருக்கிறது.

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்க... மேலும் பார்க்க

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க