செய்திகள் :

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டவா் கைது

post image

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவா் ஒருவா் தில்லியின் ஷாதராவில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கௌதம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வங்கதேசத்தின் பூா்வஷிபா பரோய் காலி கிராமத்தைச் சோ்ந்த ஷா அலி (47), தில்லி ஷாதராவின் சீமாபுரி பகுதியில் உள்ள டி-பிளாக்கில் தேநீா்க் கடை நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சட்டப்பூா்வ நடவடிக்கைகளுக்காக அலி ஆா்.கே.புரத்தில் உள்ள வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

விசாரணையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக அலி ஒப்புக்கொண்டாா். இதற்கு முன்பு அவா் வங்கதேசப் பிரிவால் நாடு கடத்தப்பட்டாா். ஆனால், 2018-ஆம் ஆண்டு அவா் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க