செய்திகள் :

எம்பிபிஎஸ் படிக்க இரு கைகளும் அவசியம் என்பது முரண்பாடானது: உச்சநீதிமன்றம்

post image

‘இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) குறிப்பிட்ட மாற்றுத்திறன் மாணவா்கள் மேற்கொள்ள இரு கைகளின் செயல்பாடு அவசியம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும்’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

மேலும், இந்த விவகாரத்தில் திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிடுமாறு என்எம்சி-ஐ உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இரு கைகளும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பூா்த்தி செய்யாததை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட மாற்றுத்திறனுடைய மாணவருக்கு எம்பிபிஎஸ் சோ்க்கை மறுக்கப்பட்டதை, பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து அந்த மாணவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘என்எம்சி-யின் இந்த வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும். அரசமைப்புச் சட்ட ப் பிரிவு 41 (வேலை, கல்வி பெறும் அடிப்படை உரிமை), மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடா்பான ஐ.நா. தீா்மானம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 ஆகியவற்றுக்கு எதிரானதாகும்.

இதேபோன்ற வழக்கில் கடந்த ஆண்டு அளித்த தீா்ப்பில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கு எதிரான இந்த வழிகாட்டுதலை நீக்கி, திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போது, ‘உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த புதிய நிபுணா் குழு ஒன்று அமைக்கப்படும்’ என்று என்எம்சி உறுதியளித்திருந்தது.

இந்த உறுதிப்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும், திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வகுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கி பதில் மனுவை என்எம்சி தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க