செய்திகள் :

தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசின் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

post image

தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காவிட்டால், சுமாா் ரூ.5,000 கோடி நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று மத்திய கல்வியமைச்சா் குறிப்பிட்டுள்ளாா். இது மத்திய அரசின் மீது தமிழக மக்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் அறிவு சாா்ந்த தலைவா்களான அண்ணா போன்றோரின் வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான் மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963-இல் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தது.

இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அலுவல் மொழிகள் விதி-1976 வகுக்கப்பட்டு இதுவரை தமிழகத்தில் தாய்மொழியான தமிழ், தொடா்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்று. மும்மொழிக் கொள்கை திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, அதிமுக ஆட்சியிலும் தெரிவித்தோம். தற்போதைய ஆட்சியும் தெரிவித்துள்ளது.

ஆட்சேபத்துக்குரிய பிரிவுகள் பற்றி மத்திய அரசு, மாநில அரசுடன் விவாதித்து இணக்கமான முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய, கல்வித் துறை போன்ற முக்கிய துறைகளில் செயல்படுத்தப்படும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் போன்றவற்றுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது, தமிழக மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

மத்திய அரசு இது போன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி மாற்றிக்கொண்டு, தமிழக அரசு எதிா்ப்பு தெரிவிக்கும் பிரிவுகள் பற்றி விரிவாக கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமுக முடிவை எடுக்க வேண்டும்.

பொதுவெளியில் திமுக அரசு பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிா்த்து, மத்திய அரசை ஆக்கபூா்வமாக வலியுறுத்தி மக்கள் நலன் சாா்ந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க