செய்திகள் :

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

post image

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!

போப் பிரான்சிஸ் நுரையீரலின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவருக்கு புதன்கிழமை எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் தொற்றின் தன்மை தீவிரமாக இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸுக்கு பாதுகாப்பு அளிக்கும் சுவிஸ் காவலர்கள், வாடிகனில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இறுதிச் சடங்குகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கல் பரவின.

ஆனால், பத்திரிகைகளில் வெளியாவது போன்று எவ்வித ஒத்திகையும் செய்யவில்லை என்றும், வழக்கமான பணிகளையே தொடர்ந்து வருவதாகவும் சுவிஸ் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் எலியா சினோட்டி விளக்கம் அளித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் சந்திப்பு

போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு புதன்கிழமை நேரில் சென்ற இத்தாலி பிரதமர் மெலோனி, அவரின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் வரை மருத்துவமனையில் இருந்த மெலோனி, போப் பிரான்சிஸ் வழக்கம்போல் நகைச்சுவை உணர்வுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரை நேரில் சந்தித்த முதல் வெளிப்புற நபர் மெலோனி ஆவார். மருத்துவர்களும் போப் பிரான்சிஸின் பணியாளர்களை தவிர அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்க... மேலும் பார்க்க

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க