செய்திகள் :

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

post image

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்தது. இப்போது பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கிறார்.

புதிய அரசு பதவியேற்ற பிறகு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இக்கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில அரசு கொடுத்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பிறகு ஏக்நாத் ஷிண்டே கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். அடிக்கடி அதனைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது ஏக்நாத் ஷிண்டே கார் மீது வெடிகுண்டு வீசப்படும் என்று இமெயில் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே

இது குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "கொலை மிரட்டலைக் கண்டு நான் பயப்படவில்லை. இதற்கு முன்பும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது. கொலை முயற்சியும் நடந்திருக்கிறது. அதைக் கண்டெல்லாம் பயப்படமாட்டேன். என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் சாதாரண கட்சி தொண்டர். அதேசமயம் பால்தாக்கரேயின் தீவிர தொண்டர். சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்தவன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். 2022ம் ஆண்டு ஆட்சியை மாற்றிய பிறகு நான் சட்டமன்றத்தில் முதல் முறையாகப் பேசும்போது தேவேந்திர பட்னாவிஸ் 200 தொகுதிகள் பெறுவார் என்று சொன்னேன். ஆனால் அவர் 232 தொகுதிகள் பெற்றார். அதனால்தான் என்னை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன். இதனைப் புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்'' என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்த போது நாசிக் மற்றும் ராய்கட் மாவட்டத்திற்குச் சிவசேனா அமைச்சர்களை நியமிக்கத் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துவிட்டார். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டும் கூட்டங்களிலும் ஏக்நாத் ஷிண்டே சரியாகக் கலந்து கொள்ளாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் அந்த திட்டத்தைத் தற்போது ஃபட்னாவிஸ் நிறுத்தி வைத்துள்ளார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க