செய்திகள் :

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம்... என்னதான் காரணம், எப்படி சரிசெய்வது?

post image

Doctor Vikatan: என் வயது 34. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். நார்ச்சத்துக்காக  காய்கறிகளும், புரதச்சத்துக்காக பருப்பு உணவுகளும் எடுத்துக்கொள்ளும்படி என்னை மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், இந்த இரண்டுமே எனக்கு வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம் ஏற்படுவதைத் தடுக்க என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் 

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் பலருக்கும் இப்படி வயிற்று உப்புசம் பிரச்னை ஏற்படுவதைப் பார்க்கிறோம். அந்தப் பிரச்னைக்கு பயந்துகொண்டே அவர்கள், இத்தகைய உணவுகளைத் தவிர்க்கிறார்கள்.  வயிற்று உப்புசம் என்பது அசௌகர்யமான ஓர் உணர்வை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான்.

உங்களுடைய குடலில், இந்த நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தை செரிக்கும் பாக்டீரியா போதுமான அளவு இல்லாததே இந்த வயிற்று உப்புச பிரச்னைக்கு காரணம். வயிற்று உப்புசத்துக்கு பயந்துகொண்டு, இந்த உணவுகளை நீங்கள் அறவே தவிர்க்க ஆரம்பித்தால், உங்கள் குடல் இயக்க சமநிலை சரியாக இருக்காது. செரிமானமும் சரியாக இருக்காது. எனவே, உங்களுடைய உணவில், நார்ச்சத்துள்ள, புரதச்சத்துள்ள உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ள ஆரம்பியுங்கள். மருத்துவர் சொன்னதற்காக, ஒரே வேளையில், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பருப்பு, கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுங்கள்.

சிறிது சிறிதாக எடுத்துப் பழகும்போது, அவற்றை செரிமானம் செய்யும் குடல் பாக்டீரியாக்கள் பேலன்ஸ் ஆகும்.  குறிப்பாக, வயிற்று உப்புசத்தைத் தவிர்க்க நினைப்பவர்கள், உணவை  சிறு அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிட்டதும் பத்து நிமிடங்கள் வாக்கிங் போகலாம். பருப்பு, கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுங்கள். ஆரம்ப நாள்களில், சமைக்காத, பச்சை உணவுகளைத் தவிருங்கள். பருப்பு வகைகளைச் சமைக்கும்போது, மேலே நுரைத்து வரும். அதை அகற்றிவிட்டுச் சாப்பிடுங்கள். இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்களாகத் தெரிந்தாலும், வயிற்று உப்புசம் பிரச்னையிலிருந்து பெரிய அளவில் நிவாரணம் தருவதை உணர்வீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க

வம்பிழுத்த அண்ணாமலை - உலக டிரெண்டிங்கில் GET OUT MODI | Delhi CM | Udhayanidhi DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Delhi CM - மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி? * டெல்லி முதல்வர் பதவியேற்பு!* Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்... மேலும் பார்க்க