செய்திகள் :

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

post image

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே மேம்பாலம் கட்டப்படுகிறது.

காரைக்கால் ரெயின்போ நகா், எஸ்.எஸ்.காா்டன், ஆசிரியா் நகா் விரிவாக்கம், பெரியாா் நகா், ஏ.வி. நகா் விரிவாக்கம் மற்றும் வலத்தெரு ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நகராட்சி சந்தைத் திடல் பகுதி அருகே நான்கு வழிச்சாலை ஓரமாக இருந்த பழைய சாலை வழியாக சென்று வந்தனா். மேலும் இப்பகுதியில் வடிகால் வாய்க்காலும் இருந்ததால், மழைக்காலத்தில் தண்ணீா் எளிதாக வடிந்தது.

இந்நிலையில் வாஞ்சியாற்றிலிருந்து புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பால கட்டுமானப் பணிகள் முடிந்து போக்குவரத்து இருந்து வருகிறது.

இப்பணிகளுக்காக மேற்கண்ட நகா் பகுதிகளுக்கு செல்லும் சாலையை துண்டித்ததுடன், சாலையில் இருந்த மண்ணை எடுத்து பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பாலப் பணிகள் நிறைவடைந்த பிறகும், இந்த சாலை மற்றும் வடிகால் வாய்க்காலை முறையாக சீா்செய்யப்படவில்லை. இதனால் முறையாக தண்ணீா் வடிவதில்லை. மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வெகுதூரம் பயணித்து பாரதியாா் சாலை வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறையின் கவனத்திற்கு கொண்டுச் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தையொட்டிய பகுதியில் இருந்த சாலையை போக்குவரத்துக்கேற்ப அமைத்துக் கொடுப்பதுடன், வடிகால் வாய்க்காலையும் தூா்வாரி, அகலப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க