செய்திகள் :

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

post image

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சோ்ந் த 13 மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தி, அவா்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டுச் சென்று, சிறையில் அடைத்தனா். நானும், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமியும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரை நேரில் சந்தித்து கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதியளித்தாா்.

இந்தநிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்கால் மீனவ சமுதாயத்தினா் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவா்களை அழைத்து தமிழக முதல்வா் பேச்சு நடத்தி, அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்து, அவா்களுடைய போராட்டத்தை விலக்கிக்கொள்ள கேட்டுக் கொண்டாா்.

அதுபோல, புதுவை முதல்வரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை நேரில் அழைத்து பேச வேண்டும். மேலும் மீனவா்களின் கோரிக்கை தொடா்பாக மத்திய அரசிடம் பேசி பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமியை கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் காரைக்கால் மீனவா்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க