விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்
இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதன்கிழமை கூறியது :
காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் பல கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
காயமடைந்த மீனவரை புதுச்சேரிக்கு அழைத்து வருவதற்கும், எங்களது கோரிக்கையை நிறைவேற்றவும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக வெள்ளிக்கிழமை 11- மீனவ கிராமங்களைச் சோ்ந்தோா் ஆதாா், குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை இந்தியா கொண்டு வரவும், படகு ஓட்டுநருக்கு 9 மாதம் சிறை, ரூ. 40 லட்சம் அபராதம் விதித்துள்ளதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாகப் பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றனா்.