செய்திகள் :

ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்

post image

ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்புவேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிட்னி டெஸ்ட்டின்போது கணுக்கால் காயத்தால் அவதியடைந்தார். மேலும், தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பாட் கம்மின்ஸ் அதன் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் முழுமையாக விலகினார்.

இந்த நிலையில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவேன் என்று ஹைதராபாத் சன்ரைசர்ஸ் கேப்டனான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அதன்தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவும் முழு உடல் தகுதியை எட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க... முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!

இதுகுறித்து பாட் கம்மின்ஸ் கூறுகையில், “குடும்பத்தின் மீது முழுக் கவனம் செலுத்தி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு அற்புதமான நேரம். இந்த நேரத்தில் விளையாட்டு, சுற்றுப்பயணம் பற்றி கவலைப்பட தேவையில்லை. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இலங்கையுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது. நான் பல ஆண்டுகளாக தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. ஆனால், அவர்கள் அற்புதமாக விளையாடினர். அவர்கள் மீது எந்தக் குறையும் இல்லை.

டி20 போட்டியில் 4 ஓவர்கள்.. அதன் பின்னர் டெஸ்ட் தொடர்.. அதுதான் என்னுடைய முழுமையான நோக்கம். அடுத்த வாரத்தில் இருந்து பயிற்சியைத் தொடங்குங்கள். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதில் நீங்கள் குறைந்த பந்துகளை வீசுவீர்கள். ஆனால், அழுத்தம் அதிகமாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

31 வயதான பாட் கம்மின்ஸை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. மேலும், இவரது தலைமையிலான ஹைதராபாத் அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 2-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க...74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை..! ரஞ்சி இறுதிப் போட்டியில் கேரளம்!

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க