செய்திகள் :

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

post image

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ’விக்கிபீடியா’ இலாப நோக்கமற்ற தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. இது தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு மூலம் தகவல்கள் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நபர்கள் இந்த தளத்தில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றலாம்.

விக்கிபீடியாவில் சம்பாஜி மகாராஜாவைக் குறித்து ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கம் பதிவிடப்பட்டிருந்தாகக் கூறி அதனை நீக்குமாறு விக்கிமீடியா அறக்கட்டளைக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் சைபர் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிக்க | தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

அதில், மராத்தியப் பேரரசரான சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜாவைக் குறித்து விக்கிபீடியாவில் தவறான உள்ளடக்கம் இடப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரைப் பின்பற்றுபவர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த உள்ளடக்கத்தை நீக்குமாறும் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த உள்ளடக்கத்தை நீக்குவது தொடர்பாக விக்கிமீடியா சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி திரைப்படமான ’சாவா’ சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க