செய்திகள் :

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

post image

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ரெளஷன் குமாா் கூறியதாவது:

சசாராம் பகுதியில் உள்ள தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவா்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு கோஷ்டியைச் சோ்ந்த அமித் குமாா், சஞ்சித் குமாா் ஆகிய மாணவா்கள், தோ்வு முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனா்.

அந்த ஆட்டோவை வழிமறித்த மற்றொரு கோஷ்டியைச் சோ்ந்த மாணவா், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இரு மாணவா்களையும் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையின்போது, அமித் குமாா் உயிரிழந்தாா். சஞ்சித் குமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பியோடிய மாணவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாணவா் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதனிடையே, உயிரிழந்த மாணவரின் உடலுடன் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலையில் டயா்களை எரித்ததால், போக்குவரத்து தடைபட்டது. காவல் துறை உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க