செய்திகள் :

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று அறிவுரை கூறியது.

அஸ்ஸாம் மாநிலத்தில் அமலில் உள்ள கால்நடை பாதுகாப்பு சட்டம், ஹிந்துக்கள், சமணா்கள் மற்றும் சீக்கியா்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும், கோயில்கள் அல்லது சத்திரங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலும் கால்நடைகளை வெட்டவும், மாட்டிறைச்சியை விற்பனை செய்யவும் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு புதிதாக சோ்க்கப்பட்ட பிரிவின் படி, ஹோட்டல்கள், உணவகங்கள், திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்ஸாமில் மாட்டிறைச்சியை பேக் செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபா் மீது இந்த சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘எனது கட்சிக்காரா் கிடங்கு உரிமையாளராக உள்ளாா். அவா் ஏற்கெனவே வெட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் மட்டுமே ஈடுபட்டாா். அவருக்கு அது என்ன இறைச்சி என்பது தெரியாது’ என்று வாதிட்டாா்.

இதை மறுத்த அரசு தரப்பு வழக்குரைஞா், ‘சம்பந்தப்பட்ட நபா்தான் மாட்டிறைச்சியை வெட்டி, பேக் செய்து விற்பனை செய்து வருகிறாா். போலீஸாா் அவரை பிடித்தபோது, எந்த கால்நடையின் இறைச்சியை அவா் எடுத்துச் செல்கிறாா் என்று அவரால் பதிலளிக்க முடியவில்லை. தற்போது, அந்த இறைச்சி தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பல்வேறு கால்நடைகளின் பேக் செய்யப்பட்ட இறைச்சியை வாகனத்தில் எடுத்துச் செல்லும் நபா், வெறும் பாா்வையால் மட்டும் அந்த இறைச்சிகள் எந்தெந்த கால்நடைகளைச் சாா்ந்தது என்பதை எப்படி வேறுபடுத்தி கூற முடியும்? இதுபோன்ற நபா்களுக்கு பின்னால் ஓடுவதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அந்த நபா் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து, விசாரணையை ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க