செய்திகள் :

விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

post image

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 ஒருநாள் போட்டிகளில் 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 6 போட்டிகளில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி தனது ரன் கணக்கைத் துவங்குவதற்கு சிரமப்பட்டார். நேற்றையப் போட்டியில் அவர் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க: முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!

ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்?

விராட் கோலி தனக்குத் தானே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் எனவும், அவர் மனதளவில் கவலையின்றி இருக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மிகவும் கஷ்டப்பட்டு ரன்கள் எடுக்க முயற்சிப்பதாக நினைக்கிறேன். அவர் விளையாடிய இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் ரன்கள் எடுக்க சிரமப்படுவது தெரியும். ஆனால், அவர் ரன்கள் எடுப்பது குறித்து கவலையடையக் கூடாது. ரோஹித் சர்மா களமிறங்கி கவலையின்றி சுதந்திரமாக விளையாடுகிறார். ஏனெனில், அணியில் பேட்டிங் செய்வதற்கு பின்னால் ஃபார்மில் உள்ள நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ரோஹித் சர்மாவைப் போன்று விராட் கோலியும் விளையாட வேண்டும்.

இதையும் படிக்க: அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

அனைத்து வீரர்களும் அவர்களது பயணத்தில் கடினமான காலக் கட்டத்தை கடந்து வருவார்கள். ஆனால், விராட் கோலி விளையாடுவதைப் பார்க்கும்போது, அவருக்கு அவரே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதாக நினைக்கிறேன். அந்த மாதிரியான அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது, வீரர்கள் ரிலாக்ஸாக விளையாடுவதில்லை என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க