செய்திகள் :

ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது: அமைச்சர் சாமிநாதன்

post image

மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

உலக தாய்மொழி தினத்தையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். முன்னதாக உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் சாமிநாதன், 'கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு அனைவருக்கும் நினைவிருக்கும். அன்றைய நாளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும்கூட அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம், தமிழை செம்மொழியாக அந்தஸ்து பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க | ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

கருணாநிதி முன்னெடுத்த ஹிந்தி திணிப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் நானும் பங்கு பெற்று சிறைவாசம் சென்றேன்.

அண்ணா, கருணாநிதி எல்லாம் தமிழை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதன்படி தமிழக முதலமைச்சர் பல்வேறு வழிகளில் இந்த துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பிற மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. வணிக வளாகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழியைவிட ஆங்கிலம் போன்ற மொழிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அதுமட்டுமின்றி மத்திய அரசு மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மீண்டும் நம்முடைய தமிழ் மொழிக்கான போராட்டம் நடைபெறுகிறது.

நம்முடைய தாயை எவ்வளவு மதிக்கிறோம், அதனைவிட நம்முடைய தாய் மொழியை நாம் மதிக்க வேண்டும். பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம்' என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | 'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க