செய்திகள் :

சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மூத்த மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2019-ல் திருவண்ணாமலையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு அருகிலுள்ள மாம்பாக்கம் அரசு சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபினனர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ. 5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையும் படிக்க | கவனம்! தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!!

இதுதொடர்பாக வழக்கில் இன்று, கர்ப்பிணிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க