செய்திகள் :

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

post image

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஹுவாய் நிறுவனத்தின் பொருள்களுக்கு கட்டுப்பாடு முதலான அமெரிக்காவின் செயல்பாடுகளால் சீனா மிகவும் பாதிப்படைந்துள்ளது.

மேலும், சீனா மீதான வரியை 25 சதவிகிதத்துக்கு உயர்த்தவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ள மரக்கட்டை ஏற்றுமதியைக் குறிவைத்து, வரி உயர்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் சீனாவை இந்தளவுக்கு சீண்டி பார்க்கும் ஒரே அதிபர் டிரம்ப்தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க:சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா தொல்லை கொடுத்து வந்தாலும், சீனா தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அமெரிக்காவுக்கு தேவைப்படும் பொருள்களில் 18 சதவிகிதம், சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதியாகும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சீனா கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான், சீனாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறுவதற்கு திட்டமிருந்தன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறினால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரமும் உயரும்.

இதற்கிடையே, சீனாவுடன் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயார் என்று டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறவிருந்த அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டன.

முதல்வருக்கு கொலை மிரட்டல்!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் ஷர்மாவிற்கு சிறைவாசி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.ஜெய்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (பிப்.21) இரவு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த நபர் அம்ம... மேலும் பார்க்க

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க