செய்திகள் :

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகளை படி எடுக்கும் நிகழ்வுடன் தொடங்கியது.

இந்தப் பயிற்சியை கல்லூரி முதல்வா் கே.ஆா். ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். பாண்டியநாடு, பண்பாட்டு ஆய்வு மைய கல்வெட்டு ஆய்வாளா் ரா. உதயகுமாா் கல்வெட்டு படியெடுக்கும் முறை குறித்து மாணவா்களுக்குப் பயிற்சியளித்தாா். சிவகங்கை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் பக்கிரிசாமி, கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் டி. தனலட்சுமி ஆகியோா் கல்வெட்டு எழுத்து வடிவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். இந்த நிகழ்வில், துறை பேராசிரியா்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாகப் பங்கேற்றனா். தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) மாணவா்களுக்கு படி எடுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க