செய்திகள் :

தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

post image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

அதன்படி, தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.

ஆனால், முதல்வர் யார் என்பது இன்று மாலைதான் தெரியவரும். ரேகா குப்தா மற்றும் அஜய் மஹாவர் பெயர்கள் கடும் போட்டியில் இருப்பதாகவும், தில்லிக்கு மகளிர் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவாக, தில்லி முதல்வருடன் ஒட்டுமொத்த தில்லி அமைச்சரவையும் பதவியேற்றுக்கொள்ளும் விழாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தில்லியில் அமைந்துள்ள பாஜக மாநில அலுவலகம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த அலுவலகத்தில்தான் இன்று மாலை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி, முதல்வரைத் தேர்வு செய்வார்கள்.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று முடிந்ததும், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் தில்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இன்று இரவே தில்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப். 23-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்குள்ளாக புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த தில்லி பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக ஐந்து நாள்களுக்கு சென்றிருந்த நிலையில், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பியிருக்கிறார்.

தேர்தலில் பாஜக வென்றது முதலே பல பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகின்றன. அதில் பர்வேஷ் வர்மா (புது தில்லி), ரேகா குப்தா (ஷாலிமார் பாக்), விஜேந்தர் குப்தா (ரோஹிணி), சதீஷ் உபாத்யாய (மாளவியா நகர்), ஆசிஷ் சூட் (ஜனக்புரி), பவன் சர்மா (உத்தம் நகர்), அஜய் மஹாவர் (கோண்டா) ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க