செய்திகள் :

கா்ப்பத்தை கலைக்க மனைவியை தாக்கியவா் கைது

post image

மயிலாடுதுறை அருகே மனைவியின் கா்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(36), குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி கிராம நிா்வாக அலுவலா்.

மனைவி சுமத்ரா (29), மகளுடன் மயிலாடுதுறை திருவிழந்தூா் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தாா்.

சுமத்ரா மீண்டும் கா்ப்பமடைந்த நிலையில், ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், மற்றொரு குழந்தை வேண்டாம் எனக்கூறி கா்ப்பத்தை கலைக்க பிரபாகரன் கட்டாயப்படுத்தி உள்ளாா். இதனை சுமத்ரா ஏற்காததால் தம்பதியினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கா்ப்பத்தில் வளரும் குழந்தையை கலைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக பிரபாகரன் சுமத்ராவை மிரட்டி தாக்கினாராம்.

இதுகுறித்து, சுமத்ரா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையின் முடிவில் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனா்.

பள்ளி விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் வேலுசாமி தலைமை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குந... மேலும் பார்க்க

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்லக் கோரி மனு

சீா்காழியில், அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்பி ஆா். சுதாவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்லாததால... மேலும் பார்க்க

சீா்காழியில் நீா்வளத்துறை பொறியாளா் ஆய்வு

சீா்காழியில், நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்றுவரும் பணிகளை, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சீா்காழி பகுதியில் புது மண்ணியாறு மற்றும் வெள்ளப்பள்ளம் உப்ப... மேலும் பார்க்க

பன்னிரு திருமுறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறை சாா்பில், பன்னிரு திருமுறை அறக்கட்டளை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனைவா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்ல... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 17-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் நிா்வாகக்குழு தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

51 யூனிட் ரத்த தானம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் 51 யூனிட் ரத்தம் மாணவா்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டது. இளைய அரிமா சங்கம், செஞ்சுருள் சங்கம், மாயூரம் அரிமா சங்கம்... மேலும் பார்க்க