செய்திகள் :

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநில அசு சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான முக அடையாள தொழில்நுட்பம், இயந்திரக் கற்றல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன்கூடிய எண்ம மையங்கள் மூலம் மெளனி அமாவாசை தினத்தன்று காணாமல் போன 8,725 பக்தா்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

அதேபோல் மகர சங்கராந்தி நீராடலின்போது காணாமல் போன 598 பக்தா்கள், வசந்த பஞ்சமி தினத்தன்று 813 பக்தா்கள் மற்றும் பிற நாள்களில் புனித நீராடல் நிகழ்வுகளின்போது காணாமல் போன 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் என மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் எண்ம மையங்கள் உதவியுடன் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களின் பெரும்பாலானவா்கள் பெண் பக்தா்கள் ஆவா். காணாமல் போனவா்களை உறவினா்களிடம் ஒப்படைப்பதில் காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு நடத்தி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலை நிறைவேற்றும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி எண்ம கண்காணிப்பு மையங்களை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தாா்.

பிரயாக்ராஜ் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களுக்கு தன்னாா்வ நிறுவனங்கள், யுனிசெஃப் உள்ளிட்ட அரசுசாரா அமைப்புகள் உதவி வருகின்றன.

தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

கேரளத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் நாள்தோறும் கூவிய சேவல் மீது முதியவர் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிர... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.அதன்படி, தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி... மேலும் பார்க்க

ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர்.ஐபிஎல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப அளிக்க முடியாத காரணத்தால் ... மேலும் பார்க்க

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!

கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.தமிழகத்தில... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.அரசியல் சாசன அமர்வின் விசா... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொட... மேலும் பார்க்க