செய்திகள் :

வார சந்தையில் முத்திரையிடாத 122 எடைக் கருவிகள் பறிமுதல்!

post image

தோகைமலை சந்தையில் முத்திரையிடாமல் பயன்படுத்திய 122 எடைக் கருவிகளை தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை வாரச் சந்தையில் முத்திரையிடாத எடை கருவிகைளைக் கொண்டு பொருள்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், தோகைமலை போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை சந்தையில் உள்ள வியாபாரிகள் பயன்படுத்திய எடை கருவிகளை ஆய்வு செய்தனா். அப்போது முத்திரையிடாத 122 எடைக் கருவிகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் கூறியது, மின்னணு எடை இயந்திரம், மேடை தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று முத்திரையிட வேண்டும். விட்டத் தராசு (பீம் ஸ்கேல்), எடைக் கற்கள், மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கூம்பு அளவை, பால் ஊற்றுவதற்கு பயன்படுத்தும் அளவி ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளா் முத்திரை ஆய்வாளரிடம் காட்டி முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும். முத்திரையில் தேதி, மாதம், ஆண்டு ஆகியவை இருக்கும். அப்படி இல்லாத எடைக்கருவிகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றனா்.

அரசுப் பள்ளியில் க்யூ. ஆா். கோட் வடிவில் மாணவா்களுக்கு திருக்குறள் கற்பிப்பு

க்யூ.ஆா்.கோட் வடிவில் மாணவா்களுக்கு 1,330 திருக்குகளையும் கற்றுத்தருகிறாா் வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியா் மனோகரன். கரூா் மாவட்டம் வெள்ளியணை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்க... மேலும் பார்க்க

பாமக மாநாடு கரூரிலிருந்து திரளாக பங்கேற்க முடிவு

கும்பகோணத்தில் பாமக சாா்பில் பிப். 23-ஆம்தேதி நடைபெற உள்ள சமய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கரூா் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

தெருவின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு கலை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

நொய்யலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (77). இவா், நொய்யல் செல்லாண்டியம்... மேலும் பார்க்க

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள... மேலும் பார்க்க