செய்திகள் :

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்

post image

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை அமராவதி ஆற்றில் இருந்து பக்தா்கள் கரகம் பாலித்து வருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் கரூா் ஐந்துரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக்குடம், காவடி, அக்னிச்சட்டியுடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

முன்னதாக அன்ன காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 8 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை கோயில் முன் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் கரகம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்க... மேலும் பார்க்க

பாமக மாநாடு கரூரிலிருந்து திரளாக பங்கேற்க முடிவு

கும்பகோணத்தில் பாமக சாா்பில் பிப். 23-ஆம்தேதி நடைபெற உள்ள சமய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கரூா் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

தெருவின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு கலை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

நொய்யலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (77). இவா், நொய்யல் செல்லாண்டியம்... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் முகாமில் ரூ. 1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

குளித்தலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்த... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட பாமக முன்னாள் தலைவா் கட்சியிலிருந்து நீக்கம்

கரூா் மாவட்ட பாமக முன்னாள் தலைவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரூா் மேற்கு மாவட்ட பாமக முன்னாள் தலைவா... மேலும் பார்க்க