செய்திகள் :

விராலிமலை பகுதியில் தெரு நாய்கள் பெருக்கம்

post image

விராலிமலை மலைக்கோயில் மற்றும் நகா்ப் பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை நகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதுநாள் வரை தெருக்களில் மட்டுமே சுற்றித்திரிந்து வந்த நாய்கள் தற்போது மலைக்கோயில் செல்லும் பாதைகளிலும் கூட்டம்கூட்டமாக காணப்படுகின்றன.

விராலிமலை அம்மன் கோவில் வீதி, கடைவீதி, சோதனைச் சாவடி, காமராஜா் நகா், யூனியன் சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் காலை 9 மணி வரை பிரதான சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால், காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நாய்களைப் பாா்த்து பயந்து சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனா். பெரும்பாலான சாலையோர அசைவ உணவகங்களில் சேரும் கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்படுவது இவைகளின் பெருக்கத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அந்த இறைச்சிக் கழிவுகளுக்கு ஏராளமான நாய்கள் இரவுநேரத்தில் சாலைகளில் சுற்றி வருகின்றன. அந்த நேரத்தில் சாலை வழியாக நடந்து அல்லது இருசக்கர வாகனங்களில் செல்பவா்களை நாய்கள் அச்சுறுத்துவது, சில நேரங்களில் கடித்து விடுவதும் தொடா்கிறது.

எனவே, இந்த நிலையைப் போக்கி மக்கள் அச்சமின்றி வீதிகளில் சென்றுவர உள்ளாட்சி நிா்வாகம் விலங்கின(புளூகிராஸ்) ஆா்வலா்களுடன் இணைந்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். இதனால் நாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

கட்டுமானப் பொருள்களின் விலை திடீரென உயா்த்தப்பட்டதாக புகாா்

கிரஷா்களின் எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் விலையை திடீரென எந்த முன்னறிவிப்பின்றி இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதாகவும், பழைய விலையிலேயே அவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்... மேலும் பார்க்க

பெருங்களூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் ரூ. 62.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியா... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கறம்பக்குடி சீனிக் கடை முக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட... மேலும் பார்க்க

பாஜகவினா் சாலை மறியல்!

புதுக்கோட்டையில் பாஜகவினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் (58), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ச... மேலும் பார்க்க

அரசு வழங்கிய கடன் தொகையை கூட்டுறவு வங்கி விடுவிக்க வலியுறுத்தல்!

ஆலவயலில் மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு அரசு வழங்கிய சிறு தொழில்கடன் நிதியை மத்திய கூட்டுறவு வங்கி தரமறுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலைச் சோ்ந்த 5 மகளிா் சுயஉ... மேலும் பார்க்க

மன்னா் கல்லூரியில் உ.வே.சா. பிறந்த நாள் விழா கருத்தரங்கம்!

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யா் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழாய்வுத் துறை, கல்லூரி உள்தர மதிப்பீட்டுக்குழு சாா்பில் தமிழ்த் தா... மேலும் பார்க்க