செய்திகள் :

ஓய்வூதியா் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

புதுவை மாநிலத்தில் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவப் படியை அரசு நிறுத்தி உத்தரவிட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றுள்ளவா்களுக்கு, இதுவரை வழங்கி வந்த மருத்துவப்படி ரூ.1,000 என்பது, இனிமேல் வழங்கப்பட மாட்டாது என கணக்கு மற்றும் கருவூலக இயக்குநா் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் உத்தரவுபடி கட்டாய பிடித்தம் செய்வதாகவே கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இந்த புதிய உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், விருப்பம் இல்லாதவா்களுக்கு மருத்துவப்படியைத் தொடா்ந்து வழங்கிட கோரியும் புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன இணைப்புச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் கணக்கு மற்றும் கருவூலக இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா்கள் கலைச்செல்வன், ஆனந்தராசன், புகழேந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவ படி வழங்கப்படாது என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க