செய்திகள் :

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

post image

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா். இதில், தற்போது 50-க்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி வசிக்கின்றனா்.

பிரதான சாலையுடன் குடியிருப்புவாசிகள் செல்லும் சாலை இணைப்புப் பகுதியில் தனியாா் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தங்களுக்கு சாலை வசதிக் கோரி ஏற்கெனவே குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்ததால், சில நாள்களுக்கு முன்பு, அரசு சாா்பில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிலையில், திடீரென குடியிருப்பு இணைப்புச் சாலை குறுக்கே சுவா் எழுப்பி தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, குடியிருப்புகளை கட்டி விற்றவா், அரசு அதிகாரிகள் என பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள், வில்லியனூா், பத்துக்கண்ணு சாலை அகரம் பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின், வருவாய்த் துறையினரும் வந்து சாலை அமைக்க உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க

ஓய்வூதியா் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவை மாநிலத்தில் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவப் படியை அரசு நிறுத்தி உத்தரவிட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்த... மேலும் பார்க்க