செய்திகள் :

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

post image

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற்பகல் நேரங்களில் கல்வேக் காலேஜ் அரசு உயா்நிலைப் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கல்வேக் காலேஜ் பள்ளியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது. பள்ளி இன்னும் திறக்கப்படாத நிலையில், அங்குள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் பிரெஞ்சு பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆனால், பிரெஞ்சுப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால், 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக, கணக்கு பாடம் போன்றவற்றுக்கு தனி ஆசிரியா் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் அங்குள்ள மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் வாயில் பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு பள்ளிக்கு நேரில் சென்று மாணவா்களிடம் பேசினாா்.

அதன்பின், பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்டோரைச் சந்தித்து போதிய ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தினாா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஓய்வூதியா் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவை மாநிலத்தில் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவப் படியை அரசு நிறுத்தி உத்தரவிட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்த... மேலும் பார்க்க